Home Contact Us



 ஆலய வழிபாடு இன்று அவசியமா? 



ஶ்ரீமந் நாராயணர்



ஆலய வழிபாடு இன்று அவசியமா?

"கல்கி-மகா-அவதாரத்தை" கண்டுக்கொள்வது எப்படி?




I. "கல்கி-மகா-அவதாரம்"

நாம் கடைசி யுகமாகிய "கலி-யுகத்தின்" முடிவில் வாழ்கிறோம். அதர்மம் நிறைந்த இந்தக் காலத்தில் 'சனாதன தர்மத்தை' ஸ்தாபிக்க எப்போது பகவான் 'கல்கி-மகா-அவதாரம்' எடுப்பார் என்று ஏங்ககிக்கொண்டிருந்த நமக்கு ஒரு நற்செய்தி! எல்லா மத புனித வேதங்களின் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுபவராக ஶ்ரீமந்நாராயணர், தமது 'என்றும் அழியாத சொந்த வடிவத்தில்' ஶ்ரீலஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா என்ற மகிமையான திருநாமத்தில், 'கல்கி-மகா-அவதாரமாக', தென் இந்தியாவில், ஶ்ரீமத் பாகவதம் கூறும் வண்ணம், (ஸ்கந்தம் 11, அதிகாரம் 5:38-42), தாமிரபரணி நதிக்கரையில், (திருநெல்வேலி மாவட்டம்) வந்துவிட்டார்.

II. ஐந்தாவது வேதமாகிய "ஶ்ரீமத் பகவத் கீதையில்" இருந்து சில சுலோகங்களை உங்கள் தியானத்திற்காக சமர்ப்பிக்கின்றோம்:

"ஜனங்கள் தமக்கு இது வேண்டும் அது வேண்டும் என்ற ஆசையினால் அறிவை இழந்து, தம்முடைய சுபாவத்திற்கு கட்டுப்பட்டு அந்த அந்த தேவர்களுக்காக ஏற்பட்ட விரதங்களுடன், இதர தேவர்களை சரணமடைகிரார்கள்." - அதிகாரம் VII : 20

"ஆனால் அத்தகைய சிற்றறிவு படைத்தவர்கள் சம்பாதித்த அந்தப் பலன் அழியக்கூடியது. தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களை அடைகிரார்கள். என்னுடைய பக்தர்களோவெனில் என்னையே அடைகிறார்கள்." - அதிகாரம் VII : 23

"தேவர்களுக்காக விரதம் அனுஷ்டிப்பவர்கள் தேவர்களை அடைகிறார்கள்; பித்ருக்களை (தம் முன்னோரை) வழிபடுபவர்கள் பித்ருக்களை அடைகிரார்கள்; பேய், பூதம் போன்றவைகளைத் தொழுபவர்கள் அவைகளையே அடைகிரார்கள்." - அதிகாரம் IX : 25.

III. பலதரப்பட்ட வழிபாடுகளும் அவற்றின் பயன்களும்:

(1) தேவர்கள், மற்றும் தேவதைகளை விரதங்களுடன் வழிபடுதல்

(2) நம் முன்னோரை வழிபடுதல் (பித்ரு வணக்கம்)

(3) பேய், பூதம் போன்றவற்றை வழிபடுதல்

(4) முழமுதற் கடவுளான, ஶ்ரீமந் நாராயணரை வழிபடுதல்

ஓரே ஓரு 'பரம புருஷரால்' படைக்கப்பட்டு அவரைவிட மிகக் குறைந்த சக்திகளை உடைய தேவர்கள், தேவதைகள், பித்ருக்கள், பேய், பூதம் போன்றவற்றை வழிபடுபவர்கள், ஆதிமுதலான ஶ்ரீமந் நாராயணரை அடைவதில்லை! இது வேதத்தின் முடிவு!! பேருண்மை!!! நாம் இருதியாக செல்லும் இடத்தைக்குறித்து நாம் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!

IV. மேற்கண்ட சுலோகங்களின் சாரம்

பகவானுடைய திரு வாயிலிருந்தே வெளிவந்த பகவத் கீதையின் மேலே குறிக்கப்பட்ட சுலோகங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், ஒரே ஓரு பரம புருஷரால் படைக்கப்பட்ட அவரைவிட மிகக் குறைந்த சக்திகளை படைத்த மற்ற தேவர்களை வணங்குபவர்கள் இவ்வாறு வகை செய்யப்பட்டிருக்கிரார்கள்.

(1) அவர்கள் தங்கள் அறிவைப் பறிகொடுத்துவிட்ட மக்கள் (அதாவது குறைந்த மதியினர்)

(2) அவர்கள் "சுயநலம்" கொண்ட மக்கள் அவர்கள் பற்பல ஆசாபாசங்களைக் கொண்டவர்கள்.

(3) அவர்கள் மிகச் சொற்ப அறிவுத்திறன் கொண்ட மக்கள்!

(4) அந்த தேவர்களிடமிருந்து அவர்கள் அடையும் அந்த வெகுமதிகள் (உண்மையில் வெறும் புலன் இச்சைகளின் மகிழ்ச்சி), அழியக்கூடியவை!

(5) இவர்கள் ஒருபோதும் முழு முதற் கடவுளை - ஆதிமூலத்தை அடையமாட்டார்கள்!!!

V. பரமபதமான "வீடு பேறு" அடைய விரும்பும் உங்களுக்கு ஒரு கேள்வி:

அன்பார்ந்த ஆஸ்திக பெருமக்களே! நீங்கள் அனைவரும் ஒரே ஒரு பரம புருஷரால் படைக்கப்பட்ட அவரைவிட மிகக்குறைந்த சக்திகளைக்கொண்ட இந்த தேவர்களின் இருப்பிடத்தை அடைய விரும்புகிறீர்களா?(அல்லது) முதன்மையான என்றும் அழிவற்ற முழு முதற்கடவுளான ஶ்ரீமந் நாராயணரின் 'கோலோகப் ப்ருந்தாவனமான' வைகுண்டத்தை அடைய விரும்புகிறீர்களா?

VI. கடவுள் இன்று ஏன் கோவில்களில் இல்லை?

இந்தியா முழுவதுமாக அராதிக்கப்பட்ட பற்பல கோயில்களிலும் கடவுளின் சக்தி நிறைந்து செயல்பட்ட காலம் ஒன்று இருந்தது. பழைய இந்தியாவிலிருந்த ஆழ்வார்கள், பெறும் ரிஷிகள் ஆகியவர்களின் சரித்திரங்களைப் படித்து இதை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். ஆனால் தற்போது நிலைமை முழுதும் மாறிவிட்டது! இன்று கடவுள் கோயில்களில் இல்லை!! கோயில்களில் கடவுள் இல்லாவிட்டால், அங்கு என்ன சக்தி இருந்து, மக்களுக்கு இன்று வழிகாட்டுகிறது? இயற்கையில் 'வெற்றிடம்' என்பது கிடையாது என்று நமக்குத் தெரியும். உண்மையான கடவுள் கோயில்களை விட்ட பிறகு (காரணங்கள் பின்னால் காட்டப்படும்), முன்பு நாம் பகவத்கீதையிலே உள்ள சுலோகங்களில் கண்டப்படி, ஒரே ஒரு பரம புருஷரால் படைக்கப்பட்டு, அவரைவிட மிகக் குறைவான சக்தியுடைய நிலையில் உள்ள தேவர்களும், தேவதைகளும், கோயில்களிலுள்ள ''அர்ச்ச அவதார விக்ரகைங்களில்'' பிரவேசித்து, முழு முதற் கடவுளின் இடத்தைப் பறித்து கொண்டனர். இதை உண்மையான கடவுளும் அனுமதித்துவிட்டார்! ஏன்? சுயநலங்கொண்ட மக்கள், தவறாக வழி நடத்தப்பட்டு, ஆதிமூலத்தை அடைய முடியாமல் போகும்படி இவ்வாறு அனுமதித்தார். இந்த ரகசியத்தை இன்று கடவுளின் உண்மையான பக்தர்கள் மட்டும் அறிந்துகொண்டு அதன்படி நடக்கிறார்கள்.

VII. கடவுள் ஏன் கோவில்களை விட்டுச் சென்றார்?

(1) இந்த பூமியாகிய கிரகத்தில், கடைசியானதும், அதிஉன்னதமானதுமான "கல்கி மகா அவதாரமாக" ஶ்ரீமந் நாராயணரே, நேராக இறங்கி வரும்போது, கோயில் வழிபாடு நின்றுவிடுகிறது, நமக்கு வேண்டிய நபரே நம் முன்பாக நேராக வந்துவிட்ட பிறகு, அவருடைய நிழற்படத்தை (போட்டோவை) போய்ப் பார்த்துக்கொண்டிருப்பதை நாம் நிறுத்திவிடுகிறோம். அதாவது, அந்த நிழற் படத்திற்கு உரிய நபரே வந்துவிட்ட பிறகும், அவரைத் தவிர்த்து அவருடைய அந்தப் படத்தையே விரும்புகிறார்கள்!

(2) கலி யுகத்தின் முடிவில், தென் இந்தியாவில், அனைத்து மத வேத ஆதாரங்களின்படி இன்று "கல்கி மகா அவதாரமாக" தோன்றியுள்ள:

பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா

என்பவரே வழிபாட்டிற்குரிய "நிஜமான கோயில்", கடவுளுடைய "முழு சக்தி" அதி உன்னதமான இந்த உருவில் இருந்துக்கொண்டு, இன்று செயல்படுகிறது. இன்றைய "ஆலய வழிபாடு" என்பது, என்றும் நிலைத்துள்ளதுமான இந்த கடவுளின் வடிவத்தை தொழுவதாகும்.

(3) ஒரு காலத்தில் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அவதாரப் புருஷர்கள் மற்றும் கோயில்கள், இவற்றின் சக்தி யெல்லாம், கடவுள் பூமியில் இறங்கி வரும்போது அந்தப் "பரம புருஷருடைய" உடலில் இழுத்துக் கொள்ளப்கடுகிறது என்பது வேதங்களில் கண்ட நிருபணமாகும்!

(4) கடந்த காலத்திய அவதாரங்களின் உடல்களும், இக்காலத்திய ஆலயங்களும், நேரிடையாக "மனித வடிவத்தில் (மானுஷம் ரூபம் செளம்யம் - கீதை 11:51) வந்துவிட்ட பரம புருஷருக்கு எதிரில் எந்தவிதமான சக்திகளையும் காட்ட முடியாது. இது மிகவும் மேலான உண்மையாகும்!

(5) ஒரு காலத்தில் தெய்வ பக்திகொண்ட மக்கள் கூடும் இடங்களாக இருந்துவந்தக் கோயில்கள், இன்று கடவுளின் சிறந்த பக்தர்களைப்போல் தங்களைக் காட்டிக்கொண்டு, தங்களிடம் வரும் மக்களுடைய பணத்தையும், உடமைகளையும் கொள்ளையடிக்கும் "திருடர்களின் குகையாக" சில போலி மனிதர்களால் மாற்றப்பட்டுவிட்டன. இவையெல்லாம் கடவுள், மதம் என்ற பெயரில் செய்யப்படுகின்றன. அந்தப் போலிகள் தங்களிடம் வரும் மனிதர்களை இனிய வார்த்தைகளாலும், அழகான பேச்சுக்களாலும் ஏமாற்றுகறார்கள்.

(6) ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டுள்ள அப்படிப்பட்ட ஒனாய்களைப்பற்றி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்! கடவுளுடைய பெயரால் பணம் திரட்டப்படும் எந்த இடத்திலும் நிச்கயமாக கடவுள் இல்லை! அவர் நமக்கு கொடுக்கும் எல்லாம் எப்பொதும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மற்றவர்களிடம் போய் கடவுளுக்காக பிச்சை எடுப்பதோ அல்லது கடவுள் பெயரினால் தங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்பவர்களை ஆதரிப்பதோ கூடாது. இப்போழுது, எல்லா கோயில்களும், புண்ணிய க்ஷேத்திரங்களும் ஊழல், கொடுமை, வன்முறை நிறைந்த இடங்களாக ஆகிவிட்டதினால், உண்மையான கடவுள் திருடர்கள் மத்தியில் இருக்க முடியுமா?

(7) இன்று கடவுள் "தெருக்களிலே" இருக்கிறார். (நடுத் தெரு நாராயணா என்பது இப்போது புரிகிரதா?) கற்கால மக்கள் "போலி ஆராதனைகளால், கடவுளைக் கோயில்களில் இருந்து துரத்திவிட்டார்கள்" அவர் வீதிகளில் இருக்கிறார்!! அவருடைய குரலை கேட்கிறீர்களா?

VIII. சந்தேகங்கள் இருப்பின், பரீக்ஷித்து பாருங்கள்:

மேலே குறித்த விளக்கங்களில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால்

(1) ஆலய வழிபாடு

(2) முன்பு இருந்த அவதார புருஷர்கள் உடல்களை, மற்றும் சமாதிகளை வணங்குதல்.

(3) பலவிதமான "தேவர்கள்", "தேவதைகள்", முதலானவர்களை வணங்கி, அவர்களின் மூலம் ஏதரவது நல்ல பலன்கள் இன்று கிடைக்கிறதா என்று பாறுங்கள். அவற்றில் நீங்கள் தோல்வியும், ஏமாற்றமும் அடைந்தால், பிறகு, உங்களை அனுக்கிரகிக்க அழைக்கும் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணாவின் திவ்ய தேகத்தின் பக்கம் திரும்புங்கள்.

IX. பரசுராமருடைய தோல்வி:

பரசுராமர், ஶ்ரீமந் நாராயணருடைய அம்சமான ஒரு அவதாரம், அந்த அம்சமானது ஶ்ரீ ராமரை சந்தித்த நேரத்தில், ஶ்ரீ ராமர் பரசுராமரிடமிருந்த அனைத்துச் சக்திகளையும் தன்னுடைய சரீரத்திற்குள் இழுத்துக்கொண்டு, அவரை அடக்கிவிட்டார். ஶ்ரீ ராமபிரான் பரசுராமரை பார்த்து, 'நீ மற்றவர்களை வென்றுவிட்டது போல என்னைத் தாழ்த்த முடியாது.' என்றார்.

ஶ்ரீ ராமர் தன் வில்லை வளைத்து, நாண் ஏற்றியதும், பரசுராமருடைய முகத்திலுருந்த அந்த ஒளி மங்கிபோய், பரசுராமருடைய அவதாரத்தின் காரியம் முடிவுக்கு வந்துவிட்டது.

அதுபோல பலவிதமான அவதாரங்களின் வேலையும், ஆலய வழிபாடுகளும், பகவான் ஶ்ரீமந் நாராயணர், கல்கி மகா அவதராமாய் பூமிக்கு வந்த பிறகு முடிவுக்கு வந்துவிட்டன, செயலிழந்து விட்டன. விண்மீன்கள் பகலில் பிரகாசிப்பதில்லை!

கல்கி மகா அவதாரத்தின் முன்பாக,

(1) ஶ்ரீமந் நாராயணரின் முந்தைய அவதாரங்கள்

(2) எங்கே முன்பு கடவுளின் சக்திகள் நிலைபெற்று இயங்கினவோ அந்த கோயில்களும்,

(3) ஒரே ஒரு பரம புருஷரால் படைக்கப்பட்டதும், அவருக்கு கீழானவைகளுமான மற்ற தேவர்களும், தேவதைகளும் இனிமேல் அந்த சக்திகளை செயல்படுத்த இயலாது. அவைகள் எல்லாம் ஒன்றுமில்லாததாக மறைந்து, எந்த ஒரே பரம புருஷரிலிருந்து வெளியாகி இயங்கினவோ, அதிலேயே சென்றடைந்துவிடுகின்றன!

ஆகையால் முன்பு கண்ட மூவகையான வழிபாடுகளும் இப்போது எந்தவிதப் பலனையும் அளிக்க முடியாது! ஏன்? ஶ்ரீமந் நாராயணர், "கல்கி மகா அவதாரம்" எடுத்து ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா என்ற மகிமையான திருநாமத்தில், பாரத புண்ணிய பூமியில் வந்துவிட்டார்!!

X. பகவான் 'ஶ்ரீ லஹரி' கிருஷ்ணாவை சரணடைவதால் ஏற்படும் ஆசீர்வாதங்கள்:

(1) ஜென்ம பாவம், கரும பாவம் நீங்கி, நொடியில் "மகா சாந்தி" பெறலாம்

(2) வறுமை, துன்பம், பயங்கர வியாதிகள், பேய் பிசாசுகளின் கட்டுகளிலிருந்து விடுதலை அடையலாம்

(3) அகில உலகிலும் திடீரென்று ஏற்படப் போகின்ற 'கலி புருஷனின்' அதி பயங்கரமான கொடூர ஆட்சியிலுருந்து தப்பிக்கலாம்!

(4) முதுமை! மரணம்! இவைகளை மேற்கொண்டு, மறு ரூபமாகி, 'சாகாமை பெற்று' (சிரங்சீவியாக) பரம பதமான ஶ்ரீ வைகுண்டம் பறந்து செல்லலாம்!

XI. உங்கள் சிந்தனைக்கு!!

சிந்தியுங்கள்! உங்களுடைய ஜாதிப் பெருமை, குலப்பெருமை, மதப்பெருமை, கல்விப்பெருமை, பணப்பெருமை, சடங்காசாரங்கள், ஆசார அனுஷ்டானங்கள், செல்வாக்கு, புகழ் தாழ்மைப்படுத்தி இவரைப் பற்றி வெளிப்படுத்தும்படியாக "கடவுளிடத்தில்" கெஞ்சுங்கள். நிச்கயமாக "ஶ்ரீமந் நாராயணரைக் கண்டுக்கொள்வீர்கள்".

XII. ஶ்ரீமந் நாராயணரின் சர்வ வல்லமையுள்ள "லஹரி" நாமம்!!

(ல + ஹரி = லஹரி), இந்த புனித நாமத்தினை பக்தியுடன் உச்சரிப்பதின் மூலம் ஆயிரக் கணக்கானவர்கள் 'மஹா சாந்தி' பெற்றுள்ளனர். பேய் பிசாசுகள் இந்த நாமத்திற்கு பயந்து நடுங்குகின்றன! இந்த நாமத்திற்கு விரோதமாக எந்த சக்தியும் நிற்க முடியாதுளு இன்று இப்புனிதரின் புனகப் படத்தினைக் கண்டு பொல்லாத தேவதைகளும், பிசாசுகளும் 'இவரே பரமாத்மா' என்று கூறி சரீரத்தினைவிட்டு ஓடுகின்றன. மரணம் இல்லாத பெரு வாழ்வு தர வந்துள்ள கல்கி மகா அவதாரத்தினை நம்பி, இவரின் மகத்தான திரு நாமத்தினை தியானிக்கின்றவர்கள், ஜாதி, மதம், இனம், மொழி, வயது வேறுபாடின்றி 'ஜென்ம பாவம், கரும பாவம் தொலைந்து, 'மஹா சாந்தி' பெற்று மரணத்தினை மேற்கொண்டு 'சாகாமை' பெறுவார்கள்!



இந்த பிரதியானது பகவான் இருபது ஆண்டு காலமாக அளித்த உபதேசங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. எல்லாப் புகழும் பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா ஒருவருக்கே உரித்தாகுக!