Home Contact Us



இவரே பரமாத்மா!!



ஸ்ரீமந் நாராயணர்



1. உங்களுக்கு சாகாமை தந்து (சிரஞ்சீவியாக) பரமபதமான ஶ்ரீ வைகுண்டம் கொண்டு செல்லவும்!

2. அகில உலகிலும் திடீரென்று எற்படப் போகின்ற "கலிபுருஷனின்" அதிபயங்கரமான கொடூர ஆட்சிக்கு தப்புவிக்கவும்!

3. மிக பயங்கரமான "அணுகுண்டு" யுத்தத்திலிருந்து காப்பாற்றவும்!

4. துஷ்டர்களையும், சத்துருக்களையும் தம்முடைய வாயின் அக்கினியால் நிர்மூலமாக்கவும்!

5. முடிவில் "கலிபுருஷனை" அழித்த "ராமராஜ்ஜியத்தினை" நிறுவவும்!

6. ஶ்ரீமந் நாராயணர் தமது என்றும் அழியாத சொந்த வடிவத்தில் "ஶ்ரீ லஹரி" கிருஷ்ணா என்ற மகிமையான திருநாமத்தில், தன்னுடைய கடைசி மகா அவதாரத்தில் வெளிப்பட்டு இருக்கின்றார்!

சாதுக்களை காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும், நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கின்றேன் - என்று கீதை 4:8 சொல்கின்றது. இந்த வார்த்தைகளை நிறைவேற்றும்படியாக ஶ்ரீமந் நாராயணர், சாதாரண மனித வடிவம் கொண்டு வந்துள்ளார்

இந்த மகா அவதாரத்தினைப் பற்றி வேதங்கள், உபநிடதங்கள், பஞ்சஸுக்தங்கள், புராணங்கள் - என்று 'இந்து மதத்தின்' எல்லா புனித நூல்களும் சாட்கியிடுகின்றன. மேலும் இவைகள் 'சாகாமை' அடைய முடியும் என்றும் கூறுகின்றன.

ஆதிசங்கரர், முத்துகுட்டி சுவாமிகள், ஜோதி இராமலிங்க அடிகளார், மகாத்மா காந்தி, தாகூர், பாரதியார், வீர பிரம்மேந்திரர், சகஜ் மார்க ஸ்தாபகர் போன்ற 'தீர்க்கதரிசிகள்' இந்த கடைசிகால மகா அவதாரமான ஶ்ரீமந் நாராயணரைப் பற்றி மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.

சிந்தியுங்கள்! உங்களுடைய ஜாதிப்பெருமை, குலப்பெருமை, மதப்பெருமை, கல்விப்பெருமை, பணப்பெருமை, சடங்காசாரங்கள், ஆசார அனுஷ்டானங்கள், செல்வாக்கு, புகழ் ஆகிய எதுவும் வரப்போகின்ற பயங்கர அழிவிலிருந்து உங்களை காப்பாற்றாது. உங்களை தாழ்மைப்படுத்தி இவரைப் பற்றி வெளிப்படுத்தும்படியாக கடவுளிடத்தில் கெஞ்சுங்கள். நிச்சயமாக, இப்பொழுது பூமிக்கு வந்துள்ள ஶ்ரீமந் நாராயணரை கண்டு கொள்வீர்கள்.

1. ஜென்ம பாவங்களும், கர்ம பாவங்களும் மன்னிக்கப்பட்டு "மஹா சாந்தி" பெற்றுக் கொள்ளவும்!

2. வறுமை, துன்பம், பயங்கர வியாதிகள், பேய் பிசாசுகளின் கட்டுகளிலிருந்து விடுதலை அடையவும்!

3. முதுமை, மரணம் இவைகளை மேற்கொண்டு மறுரூபமாகி "சாகாமை பெற்று" சிரஞ்சீவியாக பரமபதமான "ஶ்ரீ வைகுண்டம்" பறந்து செல்லவும்!

ஶ்ரீ லஹரி கிருஷ்ணா என்ற மகத்தான திருநாமத்தில் பூமிக்கு வந்துள்ள ஶ்ரீமந் நாராயணரை ஏற்றுக்கொண்டு, அவருடைய என்றும் அழியாத ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.



இவரே பரமாத்மா



மரணமில்லாத பெரு வாழ்வு தரவந்துள்ள இந்த மகா அவதாரமான "ஶ்ரீ லஹரி நாராயணர்", 1921 - ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 24-ஆம் தேதி, புண்ணிய பூமியாகிய இந்தியாவில் அவதரித்தார்.

இறந்தவர்களும் உயிர்பெற்றார்கள் !!

ஶ்ரீ "லஹரி கிருஷ்ணாவின்" அருளால் இறந்தவர்கள் பலர் உயிர் பெற்று இன்று வரை சாட்சியாக விளங்கி வருகின்றார்கள். கணக்கில் அடங்காத குருடர், செவிடர், ஊமையர், முடவர், அவயவங்கள் இழந்தோர், மேலும் குஷ்டம், வாதம் போன்ற தீராத நோயுடையோர், இப் புனிதரின் கருணையால் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கண்களில் அக்னி வெளிப்பட்டது!!

மனிதன், ஜுலை திங்கள், 21-ஆம் தேதி, 1969-ஆம் ஆண்டு, சந்திரனில் முதன் முதலாக கால் வைத்தான. இது விஞ்ஞானத்தின் மிகப்பெரிய சாதனை என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் இது மாபெரும் வரம்பு மீறிய செயல் என்று கூறுகின்றன. மனிதன் தனக்கு அளிக்கப்பட்ட எல்லைக்குள் வசித்து இறைவனை அடைய முற்பட வேண்டும். கோடிக்கணக்கான ஏழைகள், ஒரு வேளை உணவிற்கு திண்டாடும் போது, தன் சுய பெருமையை நிலைநாட்ட மனிதன் செய்த இச்செயல் இறைவனை பெரிதும் வருந்தச் செய்துள்ளது. பகவான் தன்னை உலகிற்கு வெளிப்படுத்த இந்த நாளை தெரிந்துகொண்டார். அமெரிக்காவில் உள்ள சிக்காகோ மாநகரில் பகவான் அப்பொழுது உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். தன் உரையை முடிக்கும் போது: 'இதோ! ஶ்ரீமந் நாராயணர் உங்கள் முன் நிற்கிறார்!' என்று கூறி முடித்தார். இதைக் கேட்ட பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். இதை தெய்வீக அடையாளமாக கருதினர்.

இந்த சம்பவத்திற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர், உலக சரித்திரத்தில், மிகப்பெரிய இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. ஜுன் மாதம், 18-ஆம் தேதியில், பகவான், தனது பக்தர் ஒருவருடைய இல்லத்தில் ஆன்மீக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று அவருடைய திருவுருவம் 'விஸ்வ ரூபமாக' மாறியது. பக்தர்கள் மத்தியில் நெருப்பு ஜுவாலை வெளிப்பட்டது. அங்கு குழுமியிருந்த மக்கள் பயத்தில் உறைந்து விட்டனர். பின்பு மிகுந்த நடுக்கத்துடன் பகவானை உற்று நோக்கினர். அவருடைய கண்களிலிருந்து வெளிப்பட்ட தெய்வீக ஆற்றல் குழுமியிருந்த அனைவரையும் தனக்குள் இழுத்தது. இந்த தெய்வீக சம்பவம் நிகழ்ந்துகொண்டிருக்கும் போதே, மின்னல் பேரொளியாக வெட்டியது. இடி பேரிரைச்சலுடன் முழங்கியது. பூமி அதிர்ந்தது, காற்று சூராவெளியாக மாறியது. இயற்கையும் அவர் யார் என்பதை புரிந்து கொண்டு தன்னை படைத்த ஆண்டவனுக்கு வணக்கம் செலுத்தியது. இயற்கையின் இந்த உறுதி மொழியைக் கண்டு அநேகர் ஆச்சரியப்பட்டு பகவானை கைக்கூப்பி வணங்கினர். அவரிடம் சரணாகதி அடைந்தனர். இயற்கையின் அடையாளத்தோடு கூடிய இந்த 'விஸ்வ ரூப தரிசனம்' சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பிறகு பகவான் தன்னுடைய சாதாரண உருவத்தில் தோன்றினார்.

ஶ்ரீமந் நாராயணரின் சர்வ வல்லமையுள்ள "லஹரி" நாமம் !!

இந்த புனித நாமத்தினை பக்தியுடன் உச்சரிப்பதின்மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் "மஹா சாந்தி" பெற்றுள்ளனர். பேய், பிசாசுகள் இந்த நாமத்திற்கு பயந்து நடுங்குகின்றன! இந்த நாமத்திற்கு விரோதமாக எந்த சக்தியும் நிற்க முடியாது. இன்று இப்புனிதரின் புகைப்படத்தினைக் கண்டு பொல்லாத தேவதைகளும், பிசாசுகளும் "இவரே பரமாத்மா" உன்று கூறி, சரீரத்தினை விட்டு ஓடுகின்றன. இந்த சாகாமை தர வந்துள்ள கல்கி மகா அவதாரத்தினை நம்பி, இவரின் மகத்தான திருநாமத்தினை தியானிக்கின்றவர்கள், ஜாதி! மதம்! இனம்! மொழி! வயது! வேறுபாடின்றி கர்மங்களும், பாவங்களும் தொலைந்து, மஹா சாந்தி பெற்று, மரணத்தினை மேற்கொண்டு, சாகாமை பெறுவார்கள்!

ஶ்ரீமந் நாராயணர் பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளும் ஆசீர்வாதங்கள பெற்று கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

I. முதலில் நீங்கள் தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை ஶ்ரீமந் நாராயணரின் சர்வ வல்லமையுள்ள திரு நாமமாகிய "பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா ஜெயம்" என்ற திருநாமத்தை (1008 முறை) சத்தமாக உச்சரிக்கவும்.

II. இரண்டாவதாக உங்கள் தவறுதலுக்காக மனம்வருந்தி இறைவனிடத்தில் மன்னிப்பு கேளுங்கள். கீழகண்ட பிராரத்தனையை 7 முறை தினமும் உச்சரிக்கவும்.

பிரார்த்தனை

(7 முறை தினமும் உச்சரிக்கவும்)

1. என்னை படைத்த தெய்வமே - ஶ்ரீமந் நாராயணா!

2. பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா!

3. நீங்கள் என்னை காப்பாற்ற பூமியில் வந்திருப்பதை நான் நம்புகிறேன்!

4. என்னுடைய இதயத்திற்குள் வாருங்கள்!

5. எனக்கு மன சாந்தியை தாருங்கள்!

6. என் உடம்பில் உள்ள எல்லா தீய சக்திகளையும் நீக்கவும் !

7. மறுபடியும் அவைகள் என்னுள் வராமல் காக்கவும்!

8. என் வாழ்க்கையின் முழ பொறுப்பையும் ஏற்று கொள்ளவும்!

9. நன்றி! நமஸ்காரம! ஸ்தோத்திரங்கள்!

இவ்வாறு தினமும் சிரத்தையுடன் அதிகாலையிலும், உறங்குவதற்கு முன்பும் தொடர்ந்து செய்து வாருங்கள். பகலான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியம் தரிசனமும் உங்களுக்கு உங்கள் வீட்டிலேயே கிடைக்கும். எல்லா சுபீச்சங்களும் உங்கள் வாழ்வில் உண்டாகும்!

III. அடுத்தபடியாக உங்கள் வாழ்க்கையில் கடவுள் செய்துள்ள எல்லா நன்மைகளுக்காகவும் நீங்கள் அவருக்கு உங்கள் இதய பூர்வமான நன்றி, நமஸ்காரங்கள், ஸ்தோத்திரங்களை 30 நிமிடங்களுக்கு தெரிவிக்கவும். உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை நிச்சயமாக காண்பீர்கள். இது சத்தியம்!!



இந்த பிரதியானது பகவான் இருபது ஆண்டு காலமாக அளித்த உபதேசங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது.

எல்லாப் புகழும் பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா ஒருவருக்கே உரித்தாகுக!

ஓம் நமோ பகவதே ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணாய !!